Friday 3rd of May 2024 01:32:35 PM GMT

LANGUAGE - TAMIL
சீன இராணுவத்தால் உலகுக்கு அச்சுறுத்தல் என்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்!

சீன இராணுவத்தால் உலகுக்கு அச்சுறுத்தல் என்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்!


சீனா தனது இராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. இது உலகிற்கே பெரும் அச்சுறுத்தல் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாடியுள்ளார்.

தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்காவை அச்சுறுத்துவதற்காகவே தனது இராணுவ பலத்தைக் சீனா அதிகரிக்கிறது எனவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

சீனா தனது இராணுவ செலவினங்களை 7 வீதம் அதிகரித்து 152 பில்லியன் டொலர்களாக அறிவித்துள்ளமை குறித்து வொஷிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போதே ட்ரம்ப் இவ்வாறு கூறினார்.

நிச்சயமாக சீனா உலகிற்கு ஓர் அச்சுறுத்தலே. அமெரிக்காவிலிருந்து வர்த்தக ரீதியாக அங்கு செல்லும் பணத் தொகை இராணுவ பலத்தை அதிகரிக்கவே பயன்படுகிறது.

முந்தைய அமெரிக்க ஜனாதிபதிகள் அமெரிக்காவிடமிருந்து ஆண்டுக்கு 500 பில்லியன் டொலர்களைச் சீனா கொண்டு செல்வதை அனுமதித்தனர். சீனா நம் அறிவுசார் சொத்துரிமையை அபகரிப்பதை அவர்கள் கண்டு கொள்ளாமல் இருந்தனர். நான் அப்படியல்ல எனவும் ட்ரம்ப் கூறினார்.


Category: உலகம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE